தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

Tag Archives: புனைவு

நன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல

ராகிங், என்ற பகடி வதை…?!?

யூனிவர்சிட்டியில சேரும் போதே ஒரு முடிவோட‌ இருந்தேன். ராகிங்ல என்ன கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டாலும் அத தவறாது நிறைவேற்றிவிடுவதுன்னு.

“பாட்டு பாடு”

“டான்ஸ் ஆடு”

“இவன அடி”

“தோப்புக்கரணம் போடு”

“தரையில படுத்து நீச்சல் அடி”

“தீக்குச்சிய வச்சி அளந்து காட்டு”

“இந்தா, தம் அடி”

“சரக்கு அடி”

இப்டி எல்லாமே, சின்னபுள்ளத்தனமா தான் இருந்திச்சு. ஏற்கனவே வடிவேலு மாதிரி மையிண்ட் செட் ஏற்படுத்திக்கிட்டனால, என்ன சொன்னாலும் செஞ்சேன், எவ்வளவு அடிச்சாலும், வாங்கிகிட்டு ஈஈஈஈஈன்னு பல்ல காட்னேன்.

ஏண்டா உனக்கு சொரணயே இல்லையான்னு, கேக்காதீங்க….

இப்படி ஒரு ஜூனியர்வாச்சா, எப்பிடி இருக்கும் சீனியர்க்கு; ஒரே வாரத்துல, “சீ, உன்ன யார்ரா ராகிங் பண்ணுவா”ன்னு காரி துப்பிட்டு மத்தவனுங்கள மேயிக்க போயிட்டானுங்க.

அப்பாடா எல்லாரையும் சமாளிச்சாச்சுன்னு சந்தோசம சுத்துனேன்.

கிட்டதட்ட ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் முக்கியமான 3 பேர்கிட்ட மாட்னேன்.
இவனுங்க கிட்ட மாட்டுனதுக்கு தினைக்கும் மூணுவேள அடி வாங்கலாம்.

மொத ஆளு:
இந்த சீனியர் அடிக்கவோ, திட்டவோ மாட்டான். ஆளு பொன்னம்பலத்துக்கு பங்காளி மாதிரி இருப்பான். லேசா தொண்டய செருமுனா போதும், டர் ஆயிரும்.
சனிக்கிழம, ஞாயித்திகிழம இவன் ரூமுக்கு இழுத்திட்டு போயி ஒரு முலையில நிறுத்தீருவான். அவ்ளோ தான்.
 
அவன் பாட்டுக்கும் அவன் வேலய பாத்துகிட்டிருப்பான் (பயபுள்ள பாடபுஸ்தகத்த படிப்பாங்க, கோவில் குருக்களாட்டம், முணுமுணுன்னு). ரூம்ல, பாட்டு பாடாது, போஸ்டர் கூட இருக்காது. அந்த ரூமுக்கு வர்றவனுகளும் நம்மள கண்டுக்க மாட்டாங்க (அப்புறம் நம்ம எதுக்கு அங்கனகுள்ள‌). ராத்திரி 11 மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான்.

அவ்ளோ நேரமும் சும்மா நின்னுகிட்டே இருக்கணும், பேசக்கூட தடா. (ஈஸியா தெரியிதா, ஒரு நா நின்னுபாத்து, சொல்லுங்க). ஆனா, மதியம் சாப்புட நல்லா வாங்கி தருவான்; பிரியாணி, நான்வெஜ்ன்னு (பெரிய, வள்ளலாட்டம்). அதுக்கப்புறமும் நிக்கணும், எப்டி முடியும். கண்ணு சொருகும், தூக்கம் அழுத்தும். அந்நேரம் பாத்து பாசமா ஒரு ஸ்மைல் பண்ணுவான் பாருங்க……. “டேய், ரெண்டு அடியாவது அடிச்சிட்டு விட்றா”னு மனசு கெஞ்சும்.

ரெண்டாவது ஆளூ:
இவனோடதும் (அ)கிம்ச தான். ராத்திரி மெஸ்ல‌தான் இவன் ஆள் புடிப்பான். பக்கத்துல உக்காந்து பாசமா ஆரம்பிச்சி, கொஞ்ச கொஞ்சமா மிரட்டுவான். எதுக்கா? தயிர் சாதம் திங்க சொல்லி. மெஸ்ல டெய்லி ராத்திரி தயிர்சாதம், அன்லிமிடெட். அதுக்காக, எவ்ளோ சாப்ட முடியும். கொஞ்ச நேரத்துல வயிறு கிழிஞ்சிருமோன்ற நெலம வந்தபொறகு தான், சாப்பாட்ட நிறுத்த விடுவான். அதுக்கப்புறம் தான் அவன் சாப்பிட ஆரம்பிப்பான். அவன் முடிக்கிறதுக்குள்ள, இங்க மேல்வயிறு, கீழ்வயிறு எல்லாம் நிரம்பி, அடி வயிறு நெருக்கும் பாருங்க, மரண அவஸ்தங்குறது அதான் (காமன் டாய்லட்டுக்கு க்யூல நிக்காதவங்களுக்கெல்லாம் இது சொன்னா புரியாது).

அவன் கைய கழுவுனதுலயிருந்து அஞ்சு நிமிசம் தான் டைம். “எல்லாத்தையும் முடிச்சிகிட்டு”, நம்ம புஸ்தகத்த தூக்கிகிட்டு அவன் ரூம்ல ஆஜர் ஆகணும்.
“படி தம்பி, படி”ன்னு அவனுக்கு தூக்கம் வர்றவரைக்கும் நம்மள படிக்க சொல்லி உசுரவாங்குவான். (பெத்தவங்க படின்னு சொன்னதையே கேக்காம உருப்படாம போனவங்க நாம. நம்மள பாத்து எப்படி சொல்லலாம் அவன், “படி”ங்கிற கெட்ட வார்த்தய).

படிச்சிட்டேன்னு சொன்னா, பதில் சொல்ல முடியாத கேள்வியாகேட்டு, மறுபடியும் படிக்க சொல்லுவான்.  “படிக்கதான தம்பி வந்த, படிப்பா தம்பி”ன்னு அரைமணிக்கு ஒரு அட்வைஸ் வேற. இதுல வயிறு நெறய இருக்குற தயிர்சாதத்தோட எபெக்ட், ஸ்ஸ்ஸ் அப்பா, நெனச்சாலே கண்ண கட்டுது.

எப்படியும் மூணு மணிக்குத்தான் ரிலீஸ் பண்ணுவான். அதுக்கப்புறம், எங்க தூங்குறது. கொட்டாவி சத்தமும் கோழி கூவுற சத்தமும் ஒண்ணா இருக்கும்.
இது ஒரு  நா கத இல்ல. ஒருத்தன புடிச்சான்னா, தொடர்ந்து ரெண்டு வாரத்துக்கு, அவன் விடமாட்டேன். இந்த பொழப்புக்கு, “செருப்பால கூட நாலு அடி அடிச்சிட்டு போடான்னு இருக்கும்”.

வீட்லயிருந்து ஃபோன் வந்தப்ப இவனுகள பத்தி கம்ளெயிண்ட் பண்ணா, எதிர் மொனையில தெருவே சிரிக்குது, speaker phone புண்ணியத்துல. எக்ஸ்ட்ராவா அட்வைஸ் வேற. “ஏண்டா, சும்மா நிக்க சொல்றதையும், நல்லா சாப்புடவோ இல்ல படிக்க சொல்றதையும் கம்ளெயிண்ட் பண்ற. நல்ல பசங்களா இருக்காங்க, அவனுக கூட சேந்து, அப்டியாவது படிச்சி உருப்படு.”

முணாவது ஆளூ:
இவன் மத்தவங்கள மாதிரி நாள் கணக்குல‌, வார கணக்குல படுத்த மாட்டான்.
ஒரு நாளைக்கு பத்து பசங்க தான், அதுவும் அவன் கண்ல சிக்குற முதல் பத்து பேருக்குத்தான் அந்த பாக்கியம். மாலை நேரங்களில் ஹாஸ்டல் வாசல்ல நிப்பான். (ஹாஸ்டல் யுனிவர்சிட்டியின் மெயின் கேட்டுக்கு செல்லும் பாதையில் இருந்தது. அதாவது, நம்மள தாண்டி தான் சாயங்காலம் யாரும் வெளிய போக முடியும்).

1. சட்டய கழட்டி inside outஆ மாட்டிக்கோ.
“எஸ் ஸார்”
2. பேன்ட்ட கழட்டி inside outஆ மாட்டிக்கோ.
“எஸ் ஸார்” (அறுனாகொடிக்கு நன்றி‌)
3. பனியன் எங்கடா? சட்டைக்கு மேல மாட்டு.
“எஸ் ஸார்”
4. இப்ப எல்லாரோட வாட்சையும் கழட்டி வரிசைல முதல்ல நிக்கிறவன் ரெண்டு கைலயும் மாட்டு
“எஸ் ஸார்”
5. இந்த டைம்பீஸ அவன் நெத்தியில மாட்டு
“எஸ் ஸார்”
6. நீ, இப்ப கார் ஓட்டு (சின்னபுள்ளைல வெளான்டிருப்பமே, பசங்க படத்துல வர்ற மாதிரி)
“எஸ் ஸார்”

7. அப்டியே போயி அவகிட்ட (அந்த நேரத்தில எந்த பொண்ணு வந்துகிட்டிருக்கோ) டைம் மேனஜ்மென்ட் பத்தி ஒரு நிமிஷம் லெக்சர் கொடுத்திட்டு, இந்த பேப்பர்ல “you are simply superb”ந்னு எழுதி அவ ஸைன் வாங்கிட்டு வா.

சாயங்காலம் வீட்டுக்கு போற மகராசி, எவ நின்னு டைம் மேனஜ்மென்ட் பத்தி லெக்சர் கேப்பா, அதுவும் சூப்பர்மேன்கிட்ட. “அக்கா, சீனியர், மேடம்”னு கெஞ்சிகிட்டே போகணும்.

சில புண்ணியவதிங்க வேணும்னே மெயின் கேட் வரைக்கும் இழுத்தடிப்பாங்க. (ஒருவேள நம்மள அந்த கெட்டப்புல இன்னும் நெறய நேரம் பாக்கணும்ங்ற ஆசையாக்கூட இருந்திருக்கலாம் :‍))).

எது எப்படியோ. நல்ல வேள, அப்பெல்லாம் கேமரா மொபைல் கெடயாது :‍‍‍)

ஆனா, அடுத்த வருசம் ஜூனியர்கள எல்லாம் வரிசையா
நிக்க வச்சி,
நிக்க வச்சி,
நிக்க வச்சி…..
(ஓண்ணும் செய்ய முடியலங்க. ஆன்டி ராகிங் ரூல்ஸ் ஸ்டிரிக்டா இம்பிளிம்ன்ட் பண்ட்டாங்க‌)

Picture courtesy: http://www.tribuneindia.com/2006/20060718/delhi.htm

வரதட்சணை,….கொடுமை !?!

இனி பொறுக்க முடியாதுங்க.

நானும் பாத்துக்கிட்டே இருக்கேன், இந்த பிரச்சனைக்கு யாரும் ஒரு counter கொடுக்குற மாதிரி தெரியல. அட பொண்ணுங்கள இந்த விசயத்துல நம்ப முடியாது, உண்ம தான். ஆனா இந்த பசங்க. ம்ஹூம், வேஸ்ட் ஃபெளோஸ்.

ஆனா, நான் மானஸ்தன்ய்யா.
விடமாட்டேன்.

பிரச்சன இது தாங்க, எந்த ஆல மரத்தடியில வரதட்சண பத்தி கூட்டம் போட்டாலும், உடனே இந்த பொண்ணுங்க, ” நாங்க பணம் கொடுத்து பையன வாங்குறோம்”, அதாக்கும், இதாக்கும்னு வரதட்சண கொடுக்குறத பத்தி ஓவரா சவுண்ட் விட வேண்டியது.

வரதட்சண கொடுத்துட்டா அதுக்காக எந்நேரமும் தலையில தூக்கிவச்சிக்கிட்டு ஆடணுமா, என்ன.

(Excuse me பொண்டாட்டி மேடம். கொஞ்சம் என் தலையுல இருந்து ஒரு நிமிசம் கீழ இறங்குனீங்கன்னா, கழுத்துல சொடக்கெடுத்துப்பேன். Thank you, பொண்டாட்டி மேடம்.)

நான் மானஸ்தன்ய்யா.
நான் இதுக்கு ஒரு பதில கண்டுபுடிக்காம விடமாட்டேன்.

பகல் முழுக்க‌ பரங்கிமல மேல மல்லாக்கா படுத்து யோசிச்சேன்.
இராத்திரி முழுக்க முக்காடு போட்டு உக்காந்து யோசிச்சேன்.

அஃக, புடிச்சோம்ல……counteru…

குடும்பங்குற institutionல மெரிட்ல அட்மிசன் கெடைக்காம management quotaல captitation feeச கட்டி அட்மிட் ஆகுற ஆளுங்கய்யா இவங்க. என்ன தான் captitation fees கட்டுனாலும், institution சொல்றபடி obedientட்டா இருந்தாதான் உருப்பட முடியும். அத விட்டுட்டு சும்மா, capitation fees கொடுத்தேன், வரதட்சண‌ கொடுத்தேன்னு கூவுனா,…

எப்பூடி…

இனி பல்லுமேல நாக்க போட்டு,
மெரிட்ல குவாலிஃபையாகமுடியாத இந்த பொண்ணுங்க
ஆம்புளைங்கள பாத்து எதுனா சவுண்ட் விட்டா,
பொறுக்க மாட்டான் இந்த மானஸ்தன்.

ஹா….ஹா…ஹா…..

(ஐய்யோ….ஐயோ…ஐய்யோ
உணர்ச்சிவசப்பட்டேனே உணர்ச்சிவசப்பட்டேனே.

ஏற்கனவே கட காத்து வாங்குது,
இதுல தப்பித்தவறி இந்த பக்கம் வர்ற தாய்குலங்களும்
இத பாத்தா டென்ஷனாயிடுமே.

ஆ..ஆ…ஆ…பொண்டாட்டி மேடம்,
நீங்க எப்படி இந்த பக்கமா………….
Re-Recording sound….. ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் ணங் )

ப்ளீஸ், உங்க எல்லார்கிட்டயும் ஒரு சுமால் ரெக்குவஸ்ட்டு. ஒரு ரெண்டு வாரத்துக்கு பழைய சாதத்த கழனிப்பானையில ஊத்துறதுக்கு முன்னாடி ஒரு தடவ வாசல் பக்கம் இந்த மானஸ்தன் இருக்கானான்னு ப்ளீஸ் ஒரு எட்டு பாத்துடுங்க………

டிஸ்கி: இது முழுக்க, முழுக்க புனைவு. வெறும் நகைச்சுவைகாக மட்டும்.
(ஆ… உமி வச்சி ஒத்தடம் கொடுத்தும் மண்டையில வீக்கம் வத்தலயே)

Picture without dialouges, courtesy: http://www.chinasmack.com/2008/stories/married-for-1-year-beaten-by-wife-9-times.html

எனக்கு எப்ப கல்யாணம் நடக்கும்….???

கல்யாண வயசு பசங்களா (Boys & girls) நீங்க?
(என்னது முத்துன கத்திரிக்காயா நீங்க;
நோ ப்ராளம், நீங்களும் படிக்கலாம்).

நமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு நீங்க பயந்துகிட்டிருக்குற ஆளா, இல்ல‌
நமக்கு, எப்ப கல்யாணம் நடக்குமோன்னு பெருமூச்சு விடுற டைப்பா,
எதுவா இருந்தாலும் வாங்க உங்க கல்யாணம் எப்ப நடக்கும்ன்னு உடனே தெரிஞ்சிக்கலாம்.

முதல்ல கேள்விக்கெல்லாம் பதுல சொல்லுங்க..
(எத்தனை அ/ஆ/இ தெரிவு செய்றீங்கன்னு கணக்கு வச்சிக்கோங்க‌).

உங்க வயசு என்ன?
அ. 20 -‍ 25
ஆ. 25 – 30
இ. 30 <

உங்க லைஃப் பார்ட்னர் பாக்க எப்படி இருக்கணும்?
அ. சினி ஸ்டார், Page 3 ரேன்ஜ்ல
ஆ. அழகுன்னு சொல்ல முடியாட்டியும், லட்சணமா இருக்கணும்
இ. okன்னு சொல்ல முடியாட்டியும், பயந்து கண்ண மூடிக்கிற அளவுக்கு இல்லாம இருக்கணும்

உங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ படிச்சிருக்கணும்?
அ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது
ஆ. எதாவது ஒரு டிகிரி
இ. எழுத படிக்க தெரிஞ்சா போதும்

உங்க லைஃப் பார்ட்னர் எவ்ளோ சம்பாதிக்கணும்?
அ. என்னை விட அதிகமா இல்ல என் அளவாவது
ஆ. என் சம்பளத்தில் அட்லீஸ்ட் 1/3
இ. சம்பாதிப்பது முக்கியமில்லை. பணத்தின் அருமையும், சேமிக்கும் திறமும் போதும்.

உங்க லைஃப் பார்ட்னர் எந்த ஊருல இருக்கணும்?
அ. நான் இருக்கும் ஊரிலேயே
ஆ. நான் இருக்கும் ஸ்டேட்டிலாவது
இ. கிரக்கோஷியானாலும் சரி தான்.

உங்க லைஃப் பார்ட்னர் எதை சேர்ந்தவரா இருக்கணும்?
அ. ஒரே மதம், ஒரே ஜாதி, ஒரே உட்பிரிவு / ஒரே கொள்கை, ஒரே கோஷ்டி
ஆ. ஒரே மதம் / ஜாதி / கொள்கை இருந்தா போதும். உட்பிரிவு, கோஷ்டி பத்தி கவலயில்ல.
இ. எதையும் சேராதவரா இருந்தாலும் ஒகே தான்.

உங்க லைஃப் பார்ட்னரின் நிறம்?
அ. பூமி தொடா பிள்ளையின் பாதம்
ஆ. மத்திம‌ நிறமாவது
இ. திராவிட நிறமே கருப்பு தான்

உங்களுக்கும் உங்க லைஃப் பார்ட்னர்க்கும் வயசு வித்தியாச எதிர்பார்ப்பு
(ம.மகன் வயசு -‍ ம.மகள் வயசு = )?
அ. அதிகபட்சம் 2 ஆண்டுகள் 364 நாட்கள்
ஆ. 6 வருஷம் பெரிய வித்தியாசமில்ல‌
இ. 9 வருஷம் தான, பரவாயில்ல‌

உங்க லைஃப் பார்ட்னரின் குணம் / நடத்தை பற்றிய எதிர்பார்ப்பு?
அ. யோக்கியம் நெம்பர் 1. (தரச்சான்றுடன்)
ஆ. ரொம்ப யோக்கியம்மா யாருமே இருக்கமுடியாது
இ. கல்யாணத்துக்கு அப்புறம் ஒழுங்கா இருந்தா போதும்

வரதட்சணை….
(பெண்கள் இந்த கேள்விக்கான விடைகளை கீழிருந்து மேலாக மாற்றிக்கொள்ளவும்)
அ. As per present market trend
ஆ. பொண்ணு வீடா பாத்து ஏதாவது / என் சகோதரிக்கு செய்த அளவு
இ. மூச்…என்ன பேச்சு சின்னபுள்ளதனமா

முடிவுகள்:

1. மிக அதிகமாக "அ" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நெனப்பு ரொம்ப ஓவரா இருக்கு. கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் உங்களுக்கு கல்யாண ப்ராப்தமே கிடையாது. அதுக்கு முன்னாடி குருட்டு யோகத்துல யாராவது இளிச்சவாய் உங்ககிட்ட ஏமாந்தாதான் உண்டு. ‌முடிஞ்சா திருந்தப்பாருங்க‌.

2. மிக அதிகமாக "ஆ" வை தெரிவு செய்தவர்கள்: உங்களுக்கு நல்ல மனபக்குவம் வர ஆரம்பிச்சிருச்சு. கூடிய சீக்கிரம் வரன் அமஞ்சிடும். முடிஞ்சா "இ" யை, இன்னும் சில கேள்விங்களுக்கு தெரிவு செய்ங்க.

3.மிக அதிகமாக "இ" யை தெரிவு செய்தவர்கள்: என்ன!!!! உங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலையா?????? ஹீம். இந்த அறிவு அஞ்சு வருசம் முன்னடியே இருந்திருந்தா கூட, இப்ப புள்ளய ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கலாம்ல? வருத்தப்படாதீங்க‌, எல்லா கேள்விக்கும் "இ"யையே தெரிவு செய்ங்க, கல்யாண யோகம் வரும்.

நீதி:

"கல்யாண யோகம்"கிறது பீக் ஹவர்ல வர்ற வண்டி மாதிரி. நம்ம தராதரத்துக்கு ஏத்த மாதிரி டவுண் பஸ்ஸோ, ஆட்டோவோ, டாக்சியோ வர்ற முத வண்டியில ஏறி போயிட்டே இருக்கணும். கூட்டமா இருக்கு, வசதியா இருக்காதுன்னு குத்தம் பாத்துக்கிட்டிருந்தா, அங்கயே நிக்க வேண்டியது தான்.

காலம் போயிட்டே இருக்கும்…..

அதுக்கப்புறம், மொத பஸ்லேயே அட்ஜஸ்ட் பண்ணி போயிருக்கலாம்ன்னு, புத்தி வந்தாலும் பிரயோஜனம் இல்ல.

இரட்டை அர்த்த கவித…

நான் பாட்டுக்கும் சம்மா தாங்க இருந்தேன்.
(ஹலோ, உங்க மயிண்ட் வாய்ஸ்ஸ‌ ஆஃப் பண்ணுங்க.
“நீ என்னைக்கிடா சும்மா இருந்த”,ன்னு நீங்க நெனைக்குறது, எனக்கு நல்லா கேக்குது).

வேல்தர்மாவோட (நெருப்பணை) firewall இல்லாமல் தாயானாள், பாத்தேன். நல்லா இருந்துச்சு. சரி அப்டியே நாமளும் ஒரு ட்ரை பண்ணி பாப்பமேன்னு எழுதுனது தான் இந்த வசனம்…ச்சி..ச்சி…கவித.

நெருப்பாய் அணைக்கையில்
மஞ்சத்தில்
நெருப்பணையை மறந்திட்ட‌
நெஞ்சத்தில்

தவிப்புகள் தளரும் வரை
தரச்சான்றும் தேடார்
தாய் யார், தந்தை யாரென‌
தகவலும் வேண்டார்

தரவிறக்கமே சொர்க்கம்

தரம் இறங்கியது செயல்படின்
தரித்திரமே நிதர்சம்
தர்க்கமே மிச்சம்

இந்த வரிங்கோ, firewall protection இல்லாத லேப்டாப்ல கண்ட சைட்டுக்குபோய் cracked software download பண்ணி, அது execute ஆகசோலோ laptop பணால் ஆயிடுமே, அத பத்தி எழுதுனதுப்பா.

இத்த நானு, கூடாபுணர்தல (கூடாபுணர்வ) ‍மனசுல‌ வச்சு எழுதலன்னு சொன்னா நீ என்ன நம்பவாபோற…

{கூடாபுணர்தல் (கூடாபுணர்வு) ‍ ஹைய்யா, தமிழ்ல புது வார்த்தைய கண்டுபுடிச்சிட்டேன். அதில்லயும், அந்த வார்த்த அமைப்ப பாருங்க. கூடாம புணரமுடியுமா? ஆனா “வேண்டா”ன்னு பொருள் வர்றதுக்கு “கூடா”தான நல்ல முன் ஒட்டு; கூடா நட்பு, கூடாவொழுக்கம் மாதிரி. இந்த மாதிரி வார்த்தைங்கள literature மக்கள் ஏதோ சொல்லி வகைப்படுத்துவாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க}.

(Picture courtesy: http://thetruthfulman.files.wordpress.com/2009/09/couple-laptop2-lg-new.jpg&imgrefurl=)

ப்ரியா,……வெட்கப்பட்டாள்

“இப்ப அவ காலேஜ் பஸ்ல வந்துகிட்டிருக்காளாம். நம்ம ஸ்டாப்புல அவ இறங்குனதும் நீயா போய் அவகிட்ட பேசுறயா இல்ல, அவளே வந்து பேசணுமான்னு ப்ரியா கேக்குறா”.

பேசுறதெல்லாம் பேச்சாகாதுங்க‌.
அடுத்தவன் கதைய கேட்டு சும்மா பொறாமபடாதீங்க‌.
பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.

பேசுறதபத்தி வள்ளுவர் சொன்ன குறளுக்கு உர என்னான்னா,…
(வேணாம், மயிலை மன்னார சும்மா, சும்மா டிரபுள் பண்ணக்கூடாது.)

இப்ப என் கதைய கேளுங்க….

அது, ஒரு அழகிய UG காலம்.

ப்ரியா, எங்க காலனி பொண்ணு.
ப்ரியா = ஈகோ : சேட்ட.
(அதென்னமோ, ப்ரியான்னு பேரு இருக்குற பொண்ணுங்க எல்லாம் சேட்டகாரிங்களாத்தான் இருக்காங்க, எனக்கு தெரிஞ்ச வரைக்கும்.)

காலனியில நிறைய பசங்க கார்ட், ரோஸோட அவ பின்னாடி சுத்துனாங்க. எங்க குருப்புல என்னத்தவுற எல்லாரும் அவகிட்ட பிலிம் விட பாத்து, தோத்தவனுங்க. ஆனா, அவ விட்ட நக்கல்ல எல்லா பயல்களும் தலைவி(தி)யேன்னு சரண்டர் ஆயிட்டாங்க‌‌.

நாங்க இருந்த தெருவில தான், அவ வீடு. அதுவுமில்லாம, எங்க குருப்பு பசங்க ரெண்டு பேரு, காலேஜ்ல அவ லேப் பார்ட்னர்ஸ். இவனுங்க நல்ல பேரு வாங்குறதுக்காக போட்டி போட்டு அந்த தெய்வத்துக்கு சமமா உண்ம பேசுனதுல; எங்க கொள்ளுத்தாத்தாங்க கம்மங்காட்டுக்கு போனதுல இருந்து இன்னைக்கு எவனுக்கு கான்ஸ்டிபேஸன் பிரச்சன இருந்தது வர, அவ எங்களபத்தி up to date ஆ இருப்பா.

காலனி பேக்கரில எங்க குருப்பு இருக்குறத பாத்து அவ வந்தான்னா,
நா அந்த இடத்தவிட்டு எப்படியும் எஸ்ஸாயிருவேன்.

நா அவகிட்ட பேசாததுக்கு ஒரு காரணம் இருந்திச்சு.

ஏதோ ஒரு ரிட்டையர்ட் பாட்டிக்கு ஒரு நாள் நா ஹெல்ப் பண்ண, அத பாத்து காலனியே என்ன யோக்கியன்னு என் பெர்மிஸன் இல்லாம, அவுட்ரைட்டா declare பண்ணிருச்சு. காலனியே, “யோக்கியன் கம் ஹியர், யோக்கியன் சாப்டாச்சா”னு என்கிட்ட பேசாததுதான் கொறச்சல்.
ஒரு நாள், என் காதுல படணும்னே மொக்க பிகர் ஒருத்தி, ப்ரியாட்ட, “இது சரியான அம்மாஞ்சிடி”ன்னு கமெண்ட் வேற அடிச்சி சிரிச்சா…….

இந்த காலகட்டத்துல, உண்மவிளம்பிங்கள்ள ஒருத்தன் என் கவித/கத நோட்ட‌ ஒரு நாளு எடுத்துகிட்டு போய், ப்ரியாகிட்ட கொடுத்திட்டான். எங்க நாம மாட்டுணோம்னா “இதெல்லாம் கவிதயா/கதையா. கவிதையில என்னா feelingsuuuuu”ன்னு பப்ளிக்ல ரேக்கு ரேக்குனு ரேக்கிடுவாளோன்ற பயம் தான், எனக்கு.

இப்படி நா பம்மிக்கிட்டு எஸ்கேப்பாகிட்டிருக்க, ஆனா, அவ என்னடான்னா,”இவ்ளோ நல்லா எழுதுறான்”, (அது என் கவித/கதய சொன்னாளா இல்ல ‌கையெழுத்த சொன்னாளோ), “எவ்வளவு அமைதியானவனா இருக்கான். Nice person” நு எதையோ சொல்ல, குருப்பு முழுசும் over night ல‌ சூனியம் வச்ச ஷாஜகான் “விஜய்” மாதிரி ஆகிட்டானுங்க.

அதோட ரிஸல்ட் தான் ஓப்பனிங்ல வந்த வார்னிங்/ஆர்ட்ர்.

எப்படியும் இந்த பேக்கரி வாசல்ல நம்ம மானத்த அவ வாங்க போறான்றது, confirmed. சேட்டக்காரி; அவளா வந்து பேசுனா, damage ஜாஸ்தியா இருக்கும். Risk எடுத்து நாமளே பேசிருவோம்னு முடிவு பண்ணேன்.
ஆனா, என்னத்த பேசுறது?
அதான் தெரியல.

உண்மவிளம்பிங்கள தெரியாம கேக்கப்போய், “ஒரு பேப்பர்ல குத்திட்டானுங்களேனு காலைலயிருந்து கடுப்புல இருக்கோம்….”னு அவனுங்க பைக் வீல எத்துனானுங்க. அவனுங்களுக்கு exam result பிரச்சன.

என்ன பேசுறதுன்னு வேற யோசிக்குறதுக்குள்ள,
அந்த பாழாப்போன காலேஜ் பஸ் வேற‌ வந்துரிச்சு.
முத ஆளா அவ இறங்கி, நேரா என்ன பாத்து வர ஆரம்பிச்சிட்டா…..

“பேசுடா, பேசுடா”னு கூட இருந்தவனுங்க உசுப்பேத்துற விட அரண்டு கிடக்குற உள்மனசு படபடக்க; அவள பாத்து, “ப்ரியா….”னு கொஞ்சம் சத்தமாவே கத்திட்டேன்.

அந்த கணம் அவ முகத்துல ஆயிரம் பரவசம், பூரிப்பு, பெரும, சந்தோசம், வெட்கம் (என்ன!!!!!! இவளுக்கு வெக்கப்படத்தெரியுமா????) தெரிஞ்சது. ஆனா, சத்தம் கொஞ்சம் ஜாஸ்தியா போனதுல, whole college bus, bakery, bus stopநு எல்லாரும் எங்களயே பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.

“அடப்பாவி, யோக்கியன் மாதிரி இருந்தவனா இவன்னு”, எங்க காலனி ஆளுங்க மொறைக்குறதப்பாத்து இன்னும் நா டென்ஷனாக‌,
“ஐயய்யோ, கூப்டுட்டோம், ஆனா அடுத்து என்ன பேசணும்ன்னு யோசிக்கலையே. சொதப்பிடாதடான்னு” உள்மனசு extraவா இன்னும் மிரட்ட,
இந்த குழப்பத்துல volumeம reduce பண்ணாம அப்படியே துணிஞ்சி
பேசிட்டேன், கத்திட்டேன்…….

“ப்ரியா, ரிசல்ட் வந்திருச்சில்ல, எத்தன அரியரு……..”

//பேச்சவச்சித்தான் ஒவ்வொருத்தருடைய‌ வாழ்க்கையே நகருது.
அதுனாலதான் எல்லா டீலிங்கும் எல்லாராலயும் பண்ணமுடியறதில்ல‌.//

(Picture courtesy: inspeech.net/Scholarship/default.aspx)

திருக்குறள்ல சொன்னது நர்ஸையா, கம்பவுண்டரயா….?

அண்ணே, அண்ணே, எனக்கு வெகு நாளா ஒரு சந்தேகம்ணே…..

எதுலடா….?

திருக்குறள்லதேய்ங்…

பேஷ், பேஷ். அந்த ரேஞ்சுக்கு டெவலப் ஆகிட்டயாடா கண்ணா, நீ…!
OK. proceed. what is your doubt?

திருக்குறள் எண் 950, அதிகாரம் ‍ மருந்து, பால் பொருட்பால்….

டேய், Stop. நான் என்ன சென்ஸஸ் எடுக்க வந்த ஆளா?
கண்ட விவரம் எல்லாம் எனக்கெதுக்கு.
குறள சொல்லு, கேள்விய கேளு.‌

அண்ணே, அதுல வள்ளுவர் என்ன சொல்றார்ன்னா…
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து

இப்ப என்ன இதுக்கு உனக்கு உரை என்னான்னு தெரியணூமா?
kural.muthu.org, போ,
thirukkural.com போ, எல்லார் உரையும் அதுல இருக்கு.

அதில்லதாண்ணே சந்தேகம்.
இந்த குறளுக்கு
கலைஞர் உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அருகிருந்து துணைபுரிபவர் என மருத்துவமுறை நான்கு வகையாக அமைந்துள்ளது.
மு.வ உரை:
நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
சாலமன் பாப்பையா உரை:
நோயாளி, மருத்துவர், மருந்து, அதைத் தயாரிப்பவர் என மருந்து நான்கு வகைப்படும்.
English Explanation:
Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions (Translation by Rev. Dr. G. U. Pope, Rev W. H. Drew,Rev. John Lazarus and Mr F. W. Ellis )

இதுல பாத்தீங்கண்ணா, எல்லாருமே மருத்துவமுறை நாலு வகையாக அமைந்துள்ளதுன்னு சொல்றாங்க.
ஆனா, அந்த நாலாவது வகை கம்பௌன்டர்ன்னு ஒரு சாரரும், நர்ஸம்மான்னு ஒரு சாரரும் பொருள் வர்ற மாதிரி சொல்றாங்களே.
அந்த நாலாவது வக எதுண்ணே…?

அடேய், இப்பத்தான் விஞ்ஞானம் டெவலப்பாயிருச்சி.
அந்த காலத்துல ஏது கம்பௌன்டரு, ஏது நர்ஸம்மாங்க.
முன்னாடி காலத்துல வைத்தியர் கூடவே வர்றவரு மருந்த அரச்சி தருவாரு.
அவர கம்பௌன்டருன்னு சொன்னா அப்ப வீட்ல பக்கத்துல இருந்து கவனிச்சிக்குற ஆளையா நர்ஸுன்னு சொல்றது.
மருந்த வேளாவேளைக்கு சரியான அளவுல சரியான பதத்துல யார் நோயாளிக்கு கொடுக்குறாங்களோ அவங்க தான் அந்த நாலாவது வக.

என்னமோ சொல்றீங்கண்ணே, ஆனா எனக்கென்ன்மோ இந்த நாலு உரையுமே தப்புன்னு தோணுது.

ஏண்டா திருக்குறள்லயே தப்பு, ரைட்டுன்னு சொல்ற அளவுக்கு நீ வந்துட்டயா. சொல்றா என்ன தப்பு?

அண்ணே,
உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து,
ங்குற குறள்ல இவங்க எல்லாரும் உற்றவன், தீர்ப்பான், மருந்து, உழைச்செல்வான்னு பிரிச்சி படிக்குறாங்க.
அப்பிடி படிச்சா அப்பால் நாற்கூற்றே ங்கிறதோட மேட்டர் முடிஞ்சிச்சு.
மருந்து ங்கிற வார்த்த எக்ஸ்டிரா ஆகுது.
அப்படியில்லாம உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று,
அப்பால் ‍ அதாவது அதற்கு அடுத்து, அதை கடந்து
நாற்கூற்றே மருந்து ‍‍‍‍‍ நாலாவது வகையே மருந்து.
நோயாளி, வைத்தியரு, மருந்த கொடுக்குறவரு இவங்க மூணு பேரும் வரிசைபடி தங்களுடைய கடமைய குறையில்லாம செய்யிறப்பத்தான்
மருந்துங்குறதே நாலாவதா வந்து தன் வேலய சரியா செஞ்சி சிகிச்சய முழுமையாக்கும்.
இப்படியும் சொல்லலாம்ணே.

என்ன சொல்லலாம், கொல்லலாம். போடா வெட்டிப்பயலே,
அப்புடியே பஸ் ஏறி கோயமுத்தூர் போ.
ரொம்ப பேர் கூட்டம் கூட்டமா வந்திருப்பாங்க.
அங்க போய் சத்தம் போட்டு இத சொல்லு, நல்லா வெளங்க வப்பாங்க.

சரி சரி டென்ஷனாகாதீங்கண்ணே. ஒரு சிம்பிள் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
இந்த குறளுக்கு
போப் அய்யா உர மாதிரியேதான் பாப்பைய்யா அய்யா உர இருக்கு.
மு.வ ‌அய்யா உர மாதிரியேதான் கலைஞர் அய்யா உர இருக்கு.
பெருசா வித்தியாசம் இல்லயே. அப்புறம் ஏண்ணே இவங்களும் ….?

அண்ணே அண்ணே ஓடாதீங்கண்ணே,
பதில் சொல்லிட்டு போங்கண்ணே….
பதில் சொல்லிட்டு போங்கண்ணே…
……….

இந்த இடுக ரொம்ப மொக்கத்தனமா இருந்தாலும்,
இந்த குறளக்கு இப்படியும் பொருள் சொல்லலாமான்னு
உண்மையிலேயே ஒரு சந்தேகம் இருக்கு, எனக்கு.

தமிழ் ஆர்வலர்களும், தமிழ் பெரியவங்களும் கொஞ்சம்
இந்த அடிப்பொடியானுக்கு கருத்து சொன்னா நல்லாயிருக்கும்….

(Picture courtesy: http://www.indiaglitz.com)

ஒரு கொலையை பார்த்த மதியம்…

மதியங்கள், ஊருக்குள் பெரும்பாலும் வெறுமையானவை, சுவாரசியமற்றவை. (கள்ளக்காதலர்கள் மன்னிக்க…)

ஊரை பற்றிய‌ நினைவுகள் தாயை பற்றிய நினைவுகள் போல. ஊரை பற்றிய பேச்சுக்களும், அவ்வாறே. “போ, போ நீ ஒரு பிள்ள பொறக்கவேயில்லன்னு நினச்சிக்கிறேன்”என்று தாயும் “போ, போ ஊருக்குள்ள நீ ஒருத்தி தான் சுமந்தியா” என்று பிள்ளையும் சண்டையிட்டுக்கொள்ளாத வீடு உலகத்தில் இல்லை. சண்டையிட்டு கொள்வதும் விட்டுக்கொடுப்பதும் சமாதானமாகி சேர்வதும்தான் வாழ்க்கை என்பதை தாய்‍‍பிள்ளை உறவில் தெரிந்துகொள்ளாதவர்கள் அதிகப்படியாக சண்டையிட்டு, வீடு துறந்து சமுதாயகுப்பைகளாகிறாகள். சமுதாயகுப்பைகளாக மாறி தன் பிள்ளையை குறைசொல்லும் தாய்மார்கள் உண்டெனினும் சமுதாயகுப்பைகளாக மாறி தன் தாயை குறைசொல்லும் பிள்ளைகளை தேடவேண்டும்.

ஒரு விடுமுறை நாளின் பின் மதியத்தில், ஊரை கிழித்துச்செல்லும் ஓடையை இல்லை சாக்கடையை சிறு கூட்டம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அந்த வயதில் கூட்டம் எதற்காக இருந்தாலும் அதில் முன்னே நிற்பது வீரத்தின் வெளிப்பாடு. சாக்கடை ஓடைக்கு பல அடிகள் முன்னே கூட்டம் நின்றது. ஆர்வத்தில் முன்னே மேலும் ஒரு அடி வைத்தபோது ஒரு கை தலைமுடியை பற்றி பின் இழுத்து கூட்டத்தோடு நிறுத்தியது.

கூட்டத்தின் முன் நின்று பார்த்த போது….

ஓடையில் ஒருவன் கிடந்தான். என் போன்ற சிறுவர்களுக்கு பரிச்சயம் இல்லாதவன்; உடலில் பல வெட்டுக்களோடு. சினிமா தந்த சிற்றறிவினால், அவனை யாரோ சிலர் விரட்டி வந்து வெட்டியிருக்கின்றனர் என்று யூகிக்க முடிந்தது. உயிர்வெறி அன்றி அந்த சாக்கடை ஓடையில், இறங்கத்துணியும் காரணம் யூகிக்க முடியவில்லை.

சாக்கடையில் இருந்த ஓர் திட்டிற்கு தவள முயன்றான். தோற்றான். இரண்டு கால்களின் பின்தொடைகளும் கிழிந்து, இடது கை மணிகட்டு தோலினால் மட்டும் உடலோடு ஒட்டிக்கொண்டிருக்க, தலையிலிருந்து வழியும் ரத்தம் உறையாமல் கழுவிச்சென்ற ஓடை நீரை செம்மையாக்கிக்கொண்டிருந்தது.

பின்னால், மெதுவாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது; பரிச்சயமில்லா ஒர் அமைதியுடன். தலையில் தட்டி அவ்வப்போது “போ” என்று செய்கை செய்தனர் சிலர், வார்த்தை விடுத்து . சிறுவர்கள் இது போன்ற கோரங்களை பார்க்கவேண்டாம் என்று அக்கறை கொண்டனரோ அல்லது இவ்விடத்தில் இவர் தம் பகுத்தறிவு துளிர் விடவேண்டா என எண்ணினரோ.

சாக்கடையில் கிடந்தவன் அவ்வப்போது, ஹக்….ஹக்… என்ற சத்தத்துடன் சீரான இடைவெளியில் துடித்துக்கொண்டிருந்தான். பல ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்த சுப்ரமணியபுரம் என்ற படத்தில், சீட்டு கிளப்பில் கொலைசெய்யப்படும் ஒருவன் துடித்து அடங்குவதை சில வினாடிகள் திரையில் பார்த்து, வன்முறை அதிகமாக இருக்கு என்று உச்சு கொட்டியிருப்பீர்கள். வினாடிகள் அல்ல, நிமிடங்கள் அல்ல, மணி நேரங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம், அன்று.

கட்டுப்படுத்த யாரும் இல்லை, ஆனால் சேரும் எல்லோருமே சேர்த்தனர், காத்தனர் அந்த அமைதியை. கையாலாகாத்தனம் வாரி, வளைத்து, நெருக்கி, இறுக்கும் போது அழுத்தமான அமைதி சுயதிணிப்பாகிறது.

கால் மணி, அரை மணி என்ற துண்டுகள் மறைந்து முழு மணி நேரங்கள் கடந்தன.
“வாங்கய்யா, ஆஸ்பித்திரிக்கு தூக்கிட்டு போவோம்…”, என்ற வாசகம் இறுதி வரை ஏக்கமாக முடிந்தது, என‌க்கும். படங்களில் பார்த்தது போல் பொலிஸ் வரும் என்ற எதிர்பார்ப்பு எப்போது மறைந்ததோ. வேடிக்கை எண்ணமும் கறைந்து போய், எதிர்பார்ப்புகளும் ஏமாற்றங்களாய், பசியோடு உடல் சோர்வும் சேர, கூடிய கூட்டத்தின் கால் வழி உள்புகுந்து, வெளிவந்தபோது சூரியன் மறைந்திருந்தது.

தன் பிள்ளைகளின் தயையை எதிர் நோக்கி வாழும், அவர்தம் செயல்களின் மேல் ஆளுமையற்ற, ஒர் குரூபக் கிழவி தான் வாழும் திண்ணையில் அமர்ந்தபடி கூட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் தனக்குத்தானே ஏதோ புலம்பிக்கொண்டிருந்தாள் என்று தோணியது.

பின்விளைவுகளை பற்றி எண்ணாது, அடுத்தவரின் அவசரத்திற்கும், ஆபத்திற்கும் வரிந்துகட்டி கொண்டு கிளம்பும் பிள்ளைகளை தட்டி கொடுக்கும் தாய் இருக்கும் வரை எந்த பிள்ளையும் தைரியசாலி தான். “உனக்கேன்…”, என்ற அவளின் ஒற்றை சொல்லோடுதான் ஒவ்வொறு தெருவும் ஒவ்வொறு ஊரும் மனிதம் இழக்கிறது; மயானம் நகரினுள் விஸ்தரிக்கிறது.

சொந்த ஊரின் பெருமைகள் தாயின் பெருமைகள் போல். என்ன சொல்ல…..

வியர்வைப்பூ பூத்த மதியம்…..

விடுமுறை நாட்களை விட பள்ளி நாட்களின் மதியங்கள் ரசமானவை.

பள்ளி திண்ணையில் அடுக்கப்படும் சத்துணவின் வாசனை, ஜன்னல் வழி தெரிவிக்கும் மதிய இடைவேளைக்கு சில நிமிடங்களே என்று. உணவு இடைவேளையில் உணவுண்ணும் காலம் குறைவானதே. குறைவானது உணவுண்ணும் காலம், நிறைவானது உணவின் சுவை.

அபூர்வமாய் வரும் கறி சோற்றுடனோ, கோழி குழம்புடனோ தவறாது உடன் இருக்கும் சில “கரி”த்துண்டுகள்‍‍, வரும் வழியில் பேயோ, பிசாசோ உணவை திருடி தின்பதை தடுத்த அசதியில். தயிர் சோறா, பழைய சோறா யார் கண்டது வேற்றுமையை. ஆளுக்கு ஒரு கை.

தூக்குவாளியை கழுவுகிறேன், தட்டை கழுவுகிறேன் என்று பள்ளிக்கூட குழாயிலோ, அருகில் இருக்கும் கை பம்பிலோ, கிணற்றடியிலோ தண்ணீரில் ஆடிய ஆட்டத்தின் நினைவுகள் இன்றும் ஈரமானவை. “டேய், கொண்டாடா உனக்கு ஒழுங்காவே கழுவ தெரியாது. நான் தான் கழுவி தருவேன்”, என்று தட்டை வெடுக்கென்று பிடுங்கும் வசந்தியும், “டேய், ப்ளீஸ்டா. எனக்கான்டி தண்ணி அடிச்சிக்கொடுடா”, என புன்னகைத்து கெஞ்சும் ப்ரீயாவும் கடைசிவரை சொல்லாமலே விட்டுச்சென்ற உணர்வுகள் இன்று வரை சரியாக புரிந்து கொள்ளப்படாத ஏக்கங்களே. பெண் பிள்ளைகள் சீக்கிரமே மனமுதிர்ச்சி அடைகின்றனர் என்ற உண்மை அறியாமலேயே அந்த பருவம் கடந்து செல்கிறது. அவர்கள் பார்த்துக்கொண்டேயிருக்க “நா எறிபந்தாட போறேன். பொண்ணுங்கயெல்லாம் அதுக்கு சேத்தி யில்ல” என்ற வாக்கியமே இன்று வரை நினைவிற்கு வரும் முதல் ஆணாதிக்க வெளிப்பாடு. ‌

கிட்டிப்புல், கோலி போன்ற ஆட்டங்களும், வாத்தியார்களின் கழுகு கண்களுக்கு தப்பி அவ்வப்போது அரங்கேறும். இப்பமே ஒரு வீட்டுப்பாடத்த எழுதி முடிச்சா, போற வழியில இன்னும் ரொம்ப நேரம் ஆலஊஞ்சல் ஆடலாமே என்ற திட்டங்களும் ஒரு மனதாக நிறைவேறும்.

உணவு இடைவேளை முடிந்து வகுப்பு ஆரம்பமாகும் மணியடிக்க‌, வகுப்பின் உள் நுழைய ஆசிரியரோடு இடும் போட்டி பரம்பரைகள் கடந்தும் தொடரும் சம்பிரதாயம். அவசரமாய் இடம் தேடி அமர்ந்து புத்தகம் விரிக்கையில், ஜன்னல் வழி வரும் வேப்பமர தென்றல் காற்று, வேர்வைப்பூமாலை துடைத்து, ஆசுவாசப்படுத்தி, இதம் அளிக்கும்; சமயத்தில் இதம் தாண்டி தாலாட்டும்.

மதிய உணவு இடைவேளை நேரத்தை, அரிதாக, தவறவிட்டு தாமதமாக வந்து கை வலிக்க டப்பாவை தட்டிக்கொண்டிருக்கும் ஐஸ் வண்டிகாரனும், மதிய இன்டர்வெலிலாவது மிஞ்சியிருக்கும் வெம்பிய மாம்பிஞ்சுகளையும், காய்ந்த சீனிக்கிழங்கையும், பனங்கிழங்கையும் விற்று விட காத்திருக்கும் கிழவியும், எப்போதும் பீடி வாடை அடிக்க சற்று தள்ளி அமர்ந்திருக்கும் லக்கி பிரைஸ்காரனும், பல ஆண்டுகள் தினசரி பார்த்திருந்தும் சுயபரிச்சயமின்றி காரியக்கார உற‌வுகளாகவே தொடர்ந்தது,…….ஏன்?

இத்தனை ஆண்டுகளுக்குப்பின் ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது ஏதேனும் ஒரு கிராமத்து பள்ளியை க‌டந்துபோகையில் நியாபகத்திற்கு வரும் இவர்களின் நினைவில் பள்ளிக்குச் செல்லும் சிறார்களை இன்று காண்கையில் என்ன வரும் நியாபகத்திற்கு.

32 நாள் தள்ளிருச்சு….

ஆமாங்க, period 32 நாள் ஆயிருச்சு…. சந்தோசமாதான் இருக்கு.
இவர் கெடைக்க நானும் கொடுத்துவச்சிருக்கணும் தான்.
ஒரு பொண்ணு ஒருத்தன கைபுடிச்சி வந்த பிறகு
காலண்டர பொரட்டுறப்ப
முத தடவையா 32 நாள் தள்ளிருச்சுன்னு
தெரியிறப்ப எவ்வளவு பரவசமா இருக்கும்.

கொஞ்ச நாளாவே, இவன் எங்க ஏரியாவுக்கு அடிக்கடி
வந்துட்டு போயிட்டு இருந்தான். ஒரு சிலர் வீட்டு வாசல்ல
உக்காந்து எதுவாவது பேசுவான்.
சில சமயம், sentimentடா பேசுவான்
சில சமயம், materialisticஆ பேசுவான்.
சில சமயம், philosophy
சில சமயம், science
சில சமயம், crisp
சில சமயம், வளவளான்னு….
ஆள் பாக்க என்னமோ “சொட்ட சுப்பு”
மாதிரி தான் இருப்பான், இருந்தாலும் இவன்ட்ட ஏதோ மேட்டர்
இருக்குன்னு எங்க காலனி ஆளுங்க கண்டுக்குனாங்க.

இவன் திண்ண பேச்சுக்கு தான் லாயக்கு, வேலைக்கு ஆகமாட்டான்னு
நெனச்ச ஒரு நாள் படாருன்னு வந்து என்ன கைபுடிச்சார்.
இவர் தான் எங்க வீட்ல பேசுனார். இவர் ஏற்கனவே preplanedஆ இருந்ததால
நாங்க registeration formalitiesமுடிஞ்சப்புறம் தான் எங்க மனவிழாவ
பத்தி எங்க காலனி ஆளுங்களுக்கே தெரிஞ்சது. விசயம் தெரிஞ்ச உடனே
வாழ்த்துறதுக்கு எங்க காலனி பெரியவங்க, பக்கத்து காலனி பெரியவங்க,
எங்க friendsந்னு பெரிய கூட்டமே வர ஆரம்பிச்சிட்டாங்க.
வந்தவங்கள கவனிக்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருச்சு.
அதுனால‌ எங்க first nightல இவர்…………… வேண்டாம்,
நீங்க அப்புறம் கிண்டல் பண்ணுவீங்க.

ஆனா இவங்க வீட்ல இருந்து தான் இன்னைக்கி வரைக்கும்
யாரும் வரல. ஏன்னு கேட்டா இப்போதைக்கு அவங்களுக்கு
தெரியவேண்டாம்ன்னு மட்டும் சொல்றாங்க.
இவங்க வீட்டுகாரங்களும் நல்லவங்கதாங்க.
ஆனா, இவர் பண்ண காரியத்துக்கு யார் வூட்லதான்
எடுத்த உடனே சந்தோஷ படுவாங்க. அதுக்காக எத்தன நாள்
இப்படியே வாழமுடியும். இப்பவோ 32 நாள் தாண்டியாச்சு…..

அதாங்க எனக்கு கொஞ்சம் சங்கட்டமா இருக்கு. அதே மாதிரி
கொஞ்சம் சங்கட்டமான இன்னொரு விஷயம்……..
பசங்கள்ள இவர் கொஞ்சம் கூச்சப்பட்ற டைப்.
எத செய்யிறதுக்கும் ரொம்ப தயங்குறார்.
இதுவரைக்கும் 9 தடவ தான்…….

மத்தபடி என்ன நல்லா பாத்துக்குறார்.

எங்க வாழ்க்க இப்படியே போன கூட போதுங்க…..
ஆனா, கண்டிப்பா நாங்க இன்னும் நல்லா வாழ்வோம்ன்னு எனக்கு நம்பிக்க இருக்குங்க….

தினைக்கும் விருந்தாளிகளுக்கும் பஞ்சம் இல்ல.
கடல்தாண்டி போற தேசத்துல இருந்துகூட நிறையபேர் வருவாங்க.
இது வரைக்கும் வந்தவங்க ஒரு ரெண்டாயிரம் பேராவது இருக்கும்.
வந்திட்டு போனவங்க கடுதாசி போட்டு, இவர் பதில் போட்டுன்னு அது தாண்டும் நூற…..

இப்படியெல்லாம் உங்க கிட்ட
என் பதிவு பேசினா
நான் இன்னாபா பண்றது……