தட்டச்சு பழகுகிறேன்…

அங்கிட்டு..இங்கிட்டு..போறப்ப..வாறப்ப..timepass..பண்ண‌

Tag Archives: செய்திகள்

நன்றி… இதையும் மீள் பதிவா போடுவோம்ல

இரட்டை அர்த்த கவித…

நான் பாட்டுக்கும் சம்மா தாங்க இருந்தேன்.
(ஹலோ, உங்க மயிண்ட் வாய்ஸ்ஸ‌ ஆஃப் பண்ணுங்க.
“நீ என்னைக்கிடா சும்மா இருந்த”,ன்னு நீங்க நெனைக்குறது, எனக்கு நல்லா கேக்குது).

வேல்தர்மாவோட (நெருப்பணை) firewall இல்லாமல் தாயானாள், பாத்தேன். நல்லா இருந்துச்சு. சரி அப்டியே நாமளும் ஒரு ட்ரை பண்ணி பாப்பமேன்னு எழுதுனது தான் இந்த வசனம்…ச்சி..ச்சி…கவித.

நெருப்பாய் அணைக்கையில்
மஞ்சத்தில்
நெருப்பணையை மறந்திட்ட‌
நெஞ்சத்தில்

தவிப்புகள் தளரும் வரை
தரச்சான்றும் தேடார்
தாய் யார், தந்தை யாரென‌
தகவலும் வேண்டார்

தரவிறக்கமே சொர்க்கம்

தரம் இறங்கியது செயல்படின்
தரித்திரமே நிதர்சம்
தர்க்கமே மிச்சம்

இந்த வரிங்கோ, firewall protection இல்லாத லேப்டாப்ல கண்ட சைட்டுக்குபோய் cracked software download பண்ணி, அது execute ஆகசோலோ laptop பணால் ஆயிடுமே, அத பத்தி எழுதுனதுப்பா.

இத்த நானு, கூடாபுணர்தல (கூடாபுணர்வ) ‍மனசுல‌ வச்சு எழுதலன்னு சொன்னா நீ என்ன நம்பவாபோற…

{கூடாபுணர்தல் (கூடாபுணர்வு) ‍ ஹைய்யா, தமிழ்ல புது வார்த்தைய கண்டுபுடிச்சிட்டேன். அதில்லயும், அந்த வார்த்த அமைப்ப பாருங்க. கூடாம புணரமுடியுமா? ஆனா “வேண்டா”ன்னு பொருள் வர்றதுக்கு “கூடா”தான நல்ல முன் ஒட்டு; கூடா நட்பு, கூடாவொழுக்கம் மாதிரி. இந்த மாதிரி வார்த்தைங்கள literature மக்கள் ஏதோ சொல்லி வகைப்படுத்துவாங்க. உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க}.

(Picture courtesy: http://thetruthfulman.files.wordpress.com/2009/09/couple-laptop2-lg-new.jpg&imgrefurl=)

என் திருக்குறள் சந்தேகமும், இளையராஜாவின் உரையும்…

இது எனக்கு போறாத காலமா, இல்லை உங்களுக்கெல்லாம்மான்னு எனக்கு தெரியவில்லை.
ஆனா, என் பல நாள் சந்தேகங்கள் தீர்கின்றன / உறுதி பெறுகின்றன.

நான் பாட்டுக்கும், தேமேன்னு சந்தேகத்த என்னோட வச்சிக்கிட்டுதாங்க இருந்தேன்.
ஆனா, பாருங்க; அப்பத்தான் கொஞ்ச நாளு அத மறந்திருந்தேன், ஆனா ஏதோ ஒரு போரம்ல அதே சந்தேகத்த யாரோ கிளப்பிவிட்டு, நியாபகப்படுத்துனாங்க.

சரி, அந்த போரத்துலயாவது சந்தேகம் தீரும்னு பாத்தா அது வள்ளுவர் கொண்டையாட்டம் உறுதியானது தான் மிச்சம்.

டவுட், இதானுங்க.
as usual, திருக்குறள்ல.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
(குறள் 110, அறத்துப்பால் – இல்லறவியல் – செய்ந்நன்றி அறிதல்)‌

இதுக்கு, எந்நன்றி அப்படீன்னா ‍எத்தனையோ வக நன்றி / நன்மை இருக்கு, அதுல எந்த வக
நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் உய்வு (அதாவது மன்னிப்பு / நல்வழி).

ஆனால், ஒருவர் செய்த நன்றி / நன்மையை மறந்த மகற்கு (அதாவது மக்களுக்கு) மன்னிப்பே / நல்வழியே கிடையாது. அப்பட்டீன்னு தான் (கிட்டதட்ட) எல்லாரும் சொல்லி வர்றாங்க.

நன்றியோ/ நன்மையோங்கிறதே ஒருத்தவங்க அடுத்தவங்களுக்கு செஞ்சாத்தான் உண்டு. தனக்குத்தானே செஞ்சிக்கிறதப்பத்தி பேச என்ன இருக்கு, இல்லையா.

அப்ப எங்கயோ பொருள் இடிக்குது.
இதுதாங்க என் பல நாள் டவுட்.

உற்றவன்…… குறள் மாதிரி இதுக்கு எனக்கு பொருள் உணர முடியல.
போரத்துலயும் விட கிடைக்கல.

ஆனா, அதிர்ஷ்ட வசமா, விட புலவர் முத்துலிங்கம் பேட்டி (திரும்பிப் பார்க்கிறேன், ஜெயா டிவி) வழியா கிடச்சது.

நம்ம, இளையராஜாவுக்கும் இதே டவுட் இருந்திருக்கு.
(ஹ…ஹ…டவுட்டாலஜில இப்ப நம்ம ரேன்ஜ் தெரியிதுங்களா)

புலவர கேட்டதுக்கு, “எனக்கு தெரியலயே”ன்னு சொல்லிட்டாராம்.

அப்புறம், இளையராஜாவே சொன்ன விளக்கம் என்னாண்ணா,
” நன்றிங்கிறதே அடுத்தவங்க செய்யிறது தான்.
இந்த குறள்ல “மகற்கு”ங்கிறத மக்கள்னு பொருள் பாக்குறப்ப,
நாட்டு மக்கள்னு பொருள் கொள்ளாம வீட்டு மக்கள் (அதாவது பிள்ளைகள்)
அப்படீன்னு பொருள் கொள்ளனும்.

இப்படி பாத்தா,
எந்த வக நன்றி / நன்மையாக இருந்தாலும் அதையெல்லாம் அழித்தவர்க்கு/மறந்தவர்க்கும் உண்டாம் ம‌ன்னிப்பு / நல்வழி. ஆனால், தன்னை பெற்று, வளர்த்த பெற்றோர் தனக்கு செய்த நன்றியை / நன்மையை மறந்த பிள்ளைகளுக்கு மன்னிப்போ / நல்வழியோ கிடையாது.”
அப்படீன்னு விளக்குனாராம்.

இதப்பத்தி நம்ம மயிலை மன்னார் அய்யாவுக்கு என்ன படுதுன்னு திரு. VSK அவர்கள‌ முதல்ல கேட்டிருவோம்.

இல்லறவியல்ல இந்த குறள் வர்றனால இந்த interpretation, ஏத்துக்கொள்ளப்படக்கூடியது தான்னு எனக்கும் படுது.

உங்களுக்கு என்ன படுது.

(ஏண்டா படுத்துறன்னா….?)

(Picture courtesy: http://www.nallpro.com/tamil/att1/ilayaraja.jpg)

சாப்பாட்டு ஆர்வலரா நீங்க….? ரூபாய் ஆயிரத்துக்கு ஆசையா*

வாழ்த்துக்கள். நல்லா சாப்புடுற ஆளா நீங்க‌, சந்தோஷபட வேண்டிய விஷயம் தான்.
அந்த சாப்பாட்டு பத்திதான் இப்ப கேள்வியே.

அடுத்து வர பத்து கேள்வியில எத்தன கேள்விக்கு
கரெக்ட்டா பதில் சொல்றீங்கன்னு பாப்போம்.
இங்க‌ ஆண், பெண், வயசு பாகுபாடெல்லாம் இல்ல.
இந்த கேள்விங்களுக்கு சரியான பதிலா 10/10 வாங்குங்க,
ரூபாய் ஆயிரத்துக்கு ஆசப்படுங்க‌*.

1. அஸ்கா சக்கரை எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?

2. சேமியாவின் மூலப்பொருள் எது?

3. ஜவ்வரிசி மாவு எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது?
அ. கோதுமை
ஆ. மக்காசோளம்
இ. குச்சிக்கிழங்கு
ஈ. உருளைக்கிழங்கு

4. பருப்புவடை/மசால்வடை/ஆமவடை செய்ய தேவையான பருப்பு எது?
அ. கடலைபருப்பு
ஆ. உளுத்தம்பருப்பு
இ. பாசிப்பருப்பு
ஈ. துவரம்பருப்பு

5. பாசி பயறு/ பச்சைப்பயறுக்கும் பயத்தம் பருப்புக்கும் என்னா relation?

6. ஆழாக்கு படி என்றால் எத்தனை படி அளவு?

7. அப்பளம் செய்ய உபயோகப்படுத்தப்படும் மாவு,…………

8. ராகியின் தமிழ் பெயர் என்ன….?

9. கம்பு. இந்த தானியத்த ஆங்கிலத்துல என்னா சொல்றது?

10. ஆரஞ்சு பழத்த விட 5 மடங்கு அதிகமா vitamin C இருக்குறது எந்த‌ பழத்துல‌ ( நம்ம ஊர்ல பரவலா கிடைக்கிற‌து) ?

சரியான விடைகள்:
1. கரும்புச்சாறுதேய்ங்
2. கோதுமை
3. விடை: இ
4. விடை: அ
5. தோல் நீக்கப்பட்ட பயறு, பருப்பாகிறது.
6. 1/8 படி
7. உளுந்து
8. கேப்பை / கேழ்வரகு
9. Pearl millet
10. கொய்யால (அடிங்க, வார்த்தைக்கு முன்னடி “ங்” சேக்காத).

இப்ப 10/10 வாங்குனவங்கெல்லாம் கைய தூக்குங்க.
* உங்களுக்கெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் தலா ரூபாய் ஆயிரம் வேணுமா?
ஆச, தோச. “ஆசையா”, “ஆசப்படுங்க”ன்னு தான் சொன்னேன்.
கிடைக்கும், தர்றேன்னு சொல்லலையே.
ஹி…ஹி….ஹி….

தாய்ப்பாலை தவிர்க்கலாமா?

தாய்ப்பாலோட சிறப்ப முதல்ல சொல்லிடறேன்.

முதல்ல நானே சிந்திச்சது….

1. இலவசம், இலவசம், இலவசம்.
2. உடனடியாக கிடைக்கும்.
3. 24 X 7 கிடைக்கும்.
4. அப்படியே சாப்பிடலாம்.
5. கலப்படம் இல்லை.
6. உணவே மருந்தாகும்.
7. மிகச்சிறந்த மூலப்பொருட்களின் கலவை.
8. சுத்தமும் சுகாதாரமான தயாரிப்பு.
9. இயற்க்கையான உணவு (ஆர்கானிக்!?)
10. எளிதில் ஜீரணமாகும்.
11. DTC (Direct from manufacturer to consumer).
12. மனம் விரும்பும் Container யில்.
(நான் சொன்னது பாப்பாவின் மனம்.
நீங்களும் என்ன தப்பா நினைக்கல, அதத்தான் நினைச்சீங்கன்னு எனக்கு தெரியும்.)

இப்ப சீரியஸ்ஸா…

1. குழந்தையை தொற்று நோய்களிடம் இருந்து காக்கிறது.

அ) உதாரணத்திற்கு மிகப்பரிச்சயமான டயரியா, ஃப்ளு.
ஆ) தொற்று நோய் தடுப்பு மருந்துகளின் (vaccine) செயல்பாட்டை சிறப்பாக்குகிறது.
இ) செயப்பாட்டு நோய் தடுப்புத்தன்மையை (passive immunity) அளிக்கிறது.
ஈ) Necrotizing enterocolitis (NEC) நோயை கட்டுபடுத்துகிறது. NECயை பெரும்பாலும் குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளிடம் காணலாம்.
உ) மறுபடி, மறுபடியும் தாக்கும் காது மற்றும் நுரையீரல் தொற்று நோய்களிடமிருந்து காக்கிறது.
ஊ) Herpes Simplex (HSV 2) வைரஸிடமிருந்து பாதுகாக்கிறது.
எ) Human respiratory syncytial (RSV) வைரஸிடமிருந்து பாதுகாக்கிறது. மூச்சுக்குழாய்களை தாக்கும் இந்த வைரஸிற்கு தடுப்பு மருந்தே கிடையாது.

2. குழந்தையை உடல் நலக்குறைவிலிருந்து பாதுகாக்கிறது.

அ) wheezing (மூச்சுத்திணறல்)
ஆ) SIDS (Sudden Infant Death Syndrome)யிலிருந்து பாதுகாக்கிறது. SIDS, ஏன், எதனால் ஏற்படுகிறது என்பது இன்னமும் புரியாத புதிர்தான். தூங்கபோட்ட குழந்தை இறந்துகிடக்கும். அதனால் இதை cot death என்றும் சொல்லுவார்கள்.
இ) பொதுவான குழந்தை மரணங்களிலிருந்து, மூன்று ஆண்டு வரை முலைபால் காக்கும்.
ஈ) AIDS. பெற்றோரிடமிருந்து குழந்தைக்கு பரவும் HIV-1 யிலிருந்து.
உ) Gastroesophageal Reflux குறையும். (இதை எதுக்கழிக்கிறது அல்லது ஓங்கரிக்கிறது என்றால் சரியா?)
ஊ) Multiple sclerosis (MS). மூளை, தண்டுவட மரப்பு நோயிலிருந்து பாதுகாக்கிறது. குழந்தையின் மூளை மற்றும் தண்டுவடத்தை தாக்கும் MS, வாலிப வயதிலிருந்துதான் வேலையை காட்ட ஆரம்பிக்கும்.
எ) ஹெர்னியா மற்றும் Cryptorchidismலிருந்து ( விதை பைக்கு விதைகள் இறங்கியிருக்காது).
ஏ) போனஸ். 6 மாதத்திற்கு தாய்ப்பால் கொடுத்தால் 12 மாதங்கள் வரை பாதுகாப்பு ( நிபந்தனைகளுக்கு உட்பட்டு).

3. சொறி, படை நோய் மற்றும் அலர்ஜியின் காரணமாக ஏற்படும் நோய்களிலிருந்து குழந்தையை பாதுகாக்கும்.

4. சிறப்பான வளர்ச்சிக்கு, புத்திகூர்மைக்கு மற்றும் பிறருடன் பழகும் பண்பிற்கு கியாரண்டி ( நிபந்தனைகளுக்கு உட்பட்டு).

5.மேலும், காக்கிறது
அ) பொருந்தாப்பல் அமைப்பு (malocclusion)
ஆ) சர்க்கரை வியாதி
இ) குழந்தையில் வரும் புற்று நோய்
ஈ) குடலழற்சி (Crohn’s disease)
உ) Hodgkin’s Disease …ஒரு வகை புற்று நோய்
ஊ) குழந்தைப் பருவ முடக்கு வாதம் (Juvenile Rheumatoid Arthritis)
போன்ற பலவற்றிலிருந்து.

Recent report:
1. தாய்ப்பாலின் மூலமாக மட்டுமே குழந்தைக்கு 3 (அ) 4 வகை குருத்தணுக்கள் (stem cells) கிடைக்கின்றன.
2. பல நாள் தாய்ப்பால் கொடுத்தால் குழந்தை மந்தமாகும் என்பதும் பொய். மாறாக, குழந்தைக்கு ஆளுமைத்திறன் (leadership quality) அதிகமாகிறது என்றும் நிருபிக்கப்பட்டுள்ளது.

இப்ப பாலூட்டும் அன்னையர்க்கும்:

அ) கிடு கிடுவென எடைகுறைந்து silm mummy, beautiful mummy என ஆவர்.
ஆ) மனக்கலக்கம் (anxiety) குறையும்.
இ) ovarian (முட்டையகம்), uterine (கருப்பை), endometrium (கருப்பை உட்சளிப் படலம்), breast (மார்ப்பு) யில் புற்று நோய் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறையும்.
ஈ) osteoporosis (எலும்புப்புரை) சாத்தியங்கள் நான்கு மடங்கு குறையும்.
உ) அடுத்த குழந்தைக்கான கருவுறுதிறன் தாமதமாகும். கொஞ்ச நாள் (வருஷம் இல்ல) ஜாலியா இருங்க.

என்னடா இவன் ப்ளாட்பாரத்துல லேகியம் விக்கிறவனாட்டம், sorry Tvல‌ வர்ற வைத்தியருங்க கணக்கா லிஸ்ட் போடுறானேன்னு சந்தேகப்படாதீங்க. எல்லாத்துக்கும் Reference இருக்கு. புல்லா type அடிக்க முடியல. விரல் வலிக்குது. தாய்ப்பால் கொடுக்க 101 காரணங்களை இங்க போய் படிச்சிக்கோங்க.

மேற்சொன்ன எல்லாவற்றிலுமே தாய்ப்பால், புட்டிபாலைவிட பலமடங்கு சிறந்தது என நிருபிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்சொன்ன எல்லா பலன்களும் தாய்ப்பால் அதிக நாட்கள் கொடுக்க கொடுக்க, பலன்களும் அதிகமாகும்.

உலகம் முழுவதும், குழந்தைக்கு 4 1/2 வயது வரை சந்தோசமாக முலைபால் தரும் அன்னையர்களை பற்றி நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

இப்ப நீங்களே முடிவு பண்ணிக்கோங்க, நீங்களும் உங்க குழந்தையும் எப்படியிருக்கணும்ன்னு…

Acknowledgements: Google images for all images.

ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், நியாயமா?

இப்படி ஒரு தலைப்ப பார்த்த‌ உடனே, என்னடா இவன் மொளச்சி மூணு இல வுடல,

அதுக்குள்ள இப்படி ஆயிட்டானேன்னு வருத்தப்படாதீங்க.
உங்க ஜூனியரான நான் ஏன் இந்த பதிவ போட்டேங்கிறதுக்கான‌ முக்கிய காரணம் கடைசியில.

சமீபத்தில என்ன பாதிச்ச சம்பவங்கள்ள‌ ஒண்ணு, பெருகி வரும் கருச்சிதைவு.
தினமும் எத்தனையோ பேர் கருகலைப்பு செய்றாங்க‌; அதன் தர்ம நியாங்கள் அவங்களோடது.
ஆனா கல்யாணமானப்புறம் ஒரு கருச்சிதைவுன்னா, பாகுபாடில்லாம‌ மனைவி, கணவன், அவங்க சொந்த பந்தம், friends ந்னு பலருக்கும் வருத்தம் தான். இந்த சிதைவினால அந்த பொண்ணு உடலாலும் ரொம்ப‌ பாதிப்புக்குள்ளாகிறா.

இப்ப பார்த்தீங்கன்னா கருச்சிதைவுக்கான‌ காரணங்கள் அனேகம். அதுல‌ பலது இன்னைக்கு நடைமுறை வாழ்க்கையில தவிர்க்க முடியாதது (pollution மாதிரி). இருந்தாலும் தவிர்க்க வேண்டிய 2 மட்டும் இங்கே.

மாறி வர்ற‌ கலாச்சாரத்தில கல்யாணம் கட்டிக்கிற சமயத்திலோ இல்ல கல்யாணம் ஆன பிறகோ அம்மணி; லிப் டு லிப் முத்தத்திலும், external affair யில் ஈடுபடாத உன்ன உன் friends, colleagues சிலர் “நாட்டுப்புறம்”ன்னு நக்கல் அடிச்சாலும் பரவாயில்ல. ஏன்னா

1. ஆணும் பெண்ணும் முத்தமிடறப்ப ஏற்படும் எச்சில் பரிவர்த்தனையில, ஆணின் எச்சிலோடு வருது ஒரு பிரத்யோக வஸ்து. இந்த வஸ்தாது என்ன பண்றான்? எந்த reaction நும் கொடுக்காம silent ஆ இருப்பான். இதுல முக்கியமான விசயம் என்னான்னா ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு மாதிரி இருப்பான், இந்த வஸ்தாது. முதல்ல இந்த வஸ்தாத மேலயும் கீழயும் பார்த்து முறைக்கிற பொண்ணேட உடம்பு, தொடர்ந்து வர்ற வஸ்தாதுங்க எல்லாம் ஒரே மாதிரி இருக்கிறப்ப “அட, இவனுங்க நம்ம உறவுக்காரங்க தான்”னு adjust பண்ணிக்கும்.
இப்ப, இதே ஆணால‌ அந்த பொண்ணு கருத்தரிச்சா, பிரச்சன இல்ல. அப்படி இல்லாம முத்ததுக்கு ஒருத்தன், முக்கிய வாழ்க்கைக்கு ஒருத்தன்னா பிரச்சனை தான்.

“சரி, அப்படி அந்த மாதிரி ரெண்டு வக வஸ்தாதுங்க இருந்தா என்ன ஆகும்?” அப்படிங்கறத‌ General knowledgeக்கோசரமாவது நம்ம எல்லோரும் அவசியம் தெரிஞ்சிக்கணும்.
“அப்படியாப்பட்ட சமயத்தில, உருவாகிற‌ கருவ பத்தி கேள்விப்பட்ட உடனே நம்ம வஸ்தாதுங்க, அடியாளுங்க‌ள‌ அனுப்பிச்சிடுவாங்க. இப்ப பெண்ணோட உடம்பு என்ன பண்ணும், இந்த அடியாளுங்ககிட்ட இருந்து கருவ‌ காப்பாத்த பாடுபடும். ஆனாலும் பாருங்க “நம்ம உறவுக்காரங்கன்”னு யாரு ஏற்கனவே recognize ஆகி இருக்காங்களோ அவங்க அடியாளுங்ககிட்ட இருந்து மட்டும் தான் கருவ‌ காப்பாத்த முடியும். “இந்த கருவுக்கும் எங்க ஆளுக்கும் சம்மந்தம் இல்ல”ன்னு கலாட்டா பண்ற அடியாளுங்ககிட்ட இருந்து கருவ காப்பாத்த முடியாம பாவம் பொண்ணேட உடம்பு “கதறி இரத்தமா அழும்”.

2. கிட்டதட்ட இதே மாதிரி பிரச்சனய்ய‌ விந்தணுவும் தட்டிவிடும். இதை ஆரம்பிக்க, Pre-eclampsia /Eclampsia பற்றி முதல்ல. இது ஒரு சாதாரண High BP யாக கர்ப்ப காலத்துல‌ஆரம்பிச்சி, சரியா கவனிக்கலைன்னா short spanல‌ ஆளையே தூக்கிரும். இதுக்கும் பல காரணம் இருக்கு. இந்த சமயத்துல மருந்து கொஞ்சம் dangerous.
சரி இத எப்படி தடுப்பது? Dieting, excercise இந்த‌ மாதிரி? ம்ஹும்.

இப்போதைக்கு better choice, எந்த விந்த‌ணுவால கரு உருவாகணுமோ அதே வகை விந்த‌ணுக்களே தொடர்ந்து அந்த பெண்ணுக்கு கிடைக்கணும். அப்பத்தான் இந்த பிரச்சனையை தடுக்க வாய்ப்புள்ளது. அதுனால தான் இந்த பிரச்சன பெரும்பாலும் முதல் பிரவசத்தில எழும். அதுக்காக முதல் பிரசவம் தான் முடிஞ்சிபோச்சேன்னு சேட்டய ஆரம்பிச்சா புதுசா வர்ற விந்த‌ணுக்களே இந்த பிரச்சனைய மறுபடியும் கிளப்பிவிட்டு அடுத்த கருவமட்டும் இல்லாம அந்த பொண்ணையும் சேர்த்து சமயங்களில் “கொன்று விடும்”.

இப்ப நீங்களே முடிவ சொல்லுங்க.
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் தான், அப்படிங்கறது
நியாயமா ? அநியாயமா ?

We have lost one of our acquaintance’s wife during pregnancy due to Pre-eclampsia. Though she was modest to her husband, digging the details initiated the formation of this post. THIS POST IS DEDICATED TO THOSE GIRLS AND WOMEN WHO ARE VULNERABLE TO SOME CULTURAL CHANGES THAT COULD BE THEIR LIFE’S DISASTER. THIS POST IS FOR GENERAL AWARENESS AND NOT OF ANY MEDICAL VALUE. FOR BETTER INFORMATION PLEASE CONSULT WITH RESEARCHERS IN IMMUNOLOGY, SPECIALISING IN THE TOPICS OF SALIVA, SEMEN AND ABORTION.

நான் முற்போக்குவாதியோ, பிற்போக்குவாதியோ எனக்கே தெரியாது. ஆனால், இந்த awareness செய்தி எங்கோ, யாரோ ஒரு தோழியையோ அல்லது ஒரு தோழனின் குடும்பத்தையோ காப்பாற்றலாம் என்று நம்பும் ஒரு சாதாரண Junior.